வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், வடக்கின் இன்றைய வன்முறைக் கலாசாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய காரியமில்லை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.