இலங்கையில் 75 வீதமானோர் புகைப்பிடித்தலால் மரணம்

324 0

இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் நாள்தோறும் 29.4 வீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கின்றது.

இது 2017ஆம் ஆண்டைக்காட்டிலும் அதிகமானது. 2017ஆம் ஆண்டு சர்வதேச ரீதியாக புகைப்பிடிப்போர் வீதம் 19.9ஆக இருந்தது. ஆக ஒரு வருடத்துக்குள் அது 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்காரணமான தொற்றாநோய் காரணங்களுக்கு புகைப்பிடித்தல் பிரதான இடத்தை வகிக்கிறது.

இதனால் வருடந்தோறும் 41 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். ஏனைய காரணங்களால் 71 சதவீதத்தினர் மரணமடைகின்றனர்.

புகைப்பிடித்தல் காரணமாக 30 தொடக்கம் 69 வயதானவர்களில் 85 வீதமானோர் முன்கூட்டியே மரணமடைகின்றனர்.

இதேவேளை இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக 75 வீதமானோர் மரணமடைகின்றனர் என உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment