யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

408 0

பிலிமத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுவ பகுதியில் நான்கு யானைத் தந்தங்கள் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக பிலிமத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாவட்ட தொல்பொருள் பாதுகாப்புக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க அவரது வீட்டை நேற்று சோதனை நடத்தியபோதே குறித்த நான்கு யானைத் தந்தங்கள் மீட்க்கப்பட்டதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபர் இன்று கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment