காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு மறைந்திருந்த நபர் கைது

262 0

காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிக காலம் உருவத்தை மாற்றி மறைந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான இந்த நபர் நேற்று காலி, கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி, பாதிக்கப்பட்ட பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதி பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காதல் ஒன்று தொடர்பு ஒன்றும் வைத்திருந்துள்ளார். எனினும் பலவந்தமாக அந்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் பெண் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் சந்தேக நபர் பாணந்துறை பிரதேசத்திற்கு தப்பி சென்று மறைந்திருந்துள்ளார்.

7 வருடங்களின் பின்னர் அந்த பிரதேசத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்த நபர் ஹபராதுவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

அவர் தனது உருவத்தை மாற்றி முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நபர் தொடர்பில் தகவல் கண்டுபிடித்த புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

Leave a comment