குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!

197 0

குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதல் சம்பவத்தால் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களுள் பெண்ணொருவரும் அடங்குவதாகவும், தனிப்பட்ட தகராறே இந்த கைக்குண்டு தாக்குதலுக்கு காரணமென்றும், தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 9.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், அவர் பி​ரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment