விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.நேற்று (29) ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதை அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித இடையூறும் இல்லை என்றும், எனினும் வடக்கில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.