ஆட்கடத்தல் செயற்பாடுகள் தொடர்கின்றன – அவுஸ்திரேலியா

313 0

italy-migrants-refugees-asylum-seekers-1-626x380-415x260இலங்கையில் ஆட்கடத்தற்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அகதிகள் விடயம் குறித்து அந்த நாட்டின் செனட்சபையில் இடம்பெற்ற விவாதத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கையுடன் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா ஒத்துழைத்துக்கும்.

அதேநேரம், அகதிகள் குறித்து அவுஸ்திரேலியா பின்பற்றும் கொள்கையிலும் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.