துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை – உலக சாதனையுடன் தங்கம் வென்றார் சவுரவ் சவுத்ரி

13855 0

ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 

ஜெர்மனியின் சுஹல் நகரில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இது இந்தியாவுக்கு எட்டாவது பதக்கங்கமாகும்.
இந்தப்போட்டியில் சவுத்ரி மொத்தமாக 243.7 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக சீனாவின் வாங் ஜிஹாவின் 242.5 புள்ளிகளே உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் சவுத்ரி இந்த சாதனையை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதே பிரிவில் கொரியாவின் லிம் ஹோஜின் (239.6) வெள்ளிப்பதக்கமும், சினாவின் வாங் ஜிஹாவ் (218.7) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. #

Leave a comment