ஆறு வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

247 0

யாழ்ப்பாணம், சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக நேற்று (25) மாலை மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம், பாண்டாவெட்டை பகுதியைச் சேர்ந்த 06 வயது மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதுடன் சடலம் காணப்பட்ட இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயப் பொருள்களை மீட்டனர்.

குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாமா என சந்தேகம் ஏற்பட்டுள்ள அதேவேளை, சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ இடத்தில் நேரடி விசாரணைகள் மேற்கொண்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா சிறுமியின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் இடம்பெறும் போது சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலைக்காக வெளியே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment