தாயக மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்திடுவோம் – பேர்லின் அம்மா உணவகம்

1829 0

கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாச்சார பீட மாணவர்களால் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்ற கரடியனாறு மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி/பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பிரபல ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கான விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.இக் கருத்தரங்கை சிறப்பாக ஒழுங்குசெய்வதற்கு யேர்மனியின் தலைநகரத்தில் உள்ள அம்மா உணவகம் தனது முழுமையான அனுசரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அமைப்பாளர் திரு சுரேஷ் தருமலிங்கம் அவர்களின் ஊடாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment