தமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

23131 0

தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் இரண்டு வருட உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சி நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு வழியாக இருந்தால், அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment