ஹெரோயினுடன் ஒருவர் கைது

214 0

வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுறவில் ஹெரோயினுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக குணசிங்கபுற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 23 வயதுடைய குணசிங்கப்புறம் பகுதியைச் சேர்ந்தவராவார். இதன்போது அவரிடமிருந்து சுமார் 9.214 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் வாழைத்தோட்டம் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது நீதிவான் எதிர்வரும் ஜூலை மதம் 08 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a comment