நந்­திக்­க­ட­லு­டன், நாயாறு நீரே­ரி­யும் பறி­போ­கி­றது- 9 ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­குறி!

321 0

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டிக்­கு­ரிய நந்­திக்­க­டல் மற்றும் நாயாறு நீரே­ரி­கள் என்­பன முழு­மை­யாக வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மாக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 21 ஆயி­ரத்து 265 ஏக்­கர் நிலப் பரப்பு வன ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தால் இயற்கை ஒதுக்­கி­ட­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இயற்கை ஒதுக்­கி­ட­மாக அறி­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­தி­னுள் மனி­தர்­கள் பிர­வே­சிப்­பது குற்­ற­மா­கும்.

இரண்டு நீரே­ரி­க­ளி­லும் தொழில் நட­வ டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த சுமார் 9 ஆயி­ ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மான நிலப் பரப்­புக்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் அறி­வித்­தல் 2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 24ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

நந்­திக் கடல் இயற்கை ஒதுக்­கி­டம், நாயாறு இயற்கை ஒதுக்­கி­டம் என்று இரண்டு பிர­தே­சங்­க­ளும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. நந்­திக் கடல் இயற்கை ஒதுக்­கி­டத்­துக்­காக 10 ஆயி­ரத்து 234 ஏக்­க­ரும், நாயாறு இயற்கை ஒதுக்­கி­டத்­துக்­காக 11 ஆயி­ரத்து 31 ஏக்­க­ருக்­கும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

நந்­திக்­க­டலை நம்பி 5 ஆயி­ரம் குடும்­பங்­க­ளும், நாயாற்றை நம்பி 4 ஆயி­ரம் குடும்­பங்­க­ளும் தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இரண்டு நீரே­ரி­க­ளும் நன்­னீர் மீன்­பி­டி­யா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­துக்­கு­ரி­ய­வை­யா­கும்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டி­யில் பிர­தான இடம் பிடிப்­பது நந்­திக்­க­டல் நீரே­ரி­யா­கும். இந்த நீரே­ரி­யில் சுமார் 5 ஆயி­ரம் குடும்­பங்­கள் வீச்­சுத் தொழில் செய்து மீன்­பி­டி­யில் ஈடு­ப­டு­கின்­றன. அத்­து­டன் இறால் பிடிப்­பும் இந்­தப் பகு­தி­யி­லேயே இடம்­பெ­று­கின்­றது. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் பொரு­ளா­தா­ரத்­தின் ஆணி­வே­ராக நந்­திக்­க­டல் மீன்­பி­டியே விளங்­கு­கின்­றது.

நாயாற்­றுக் கடல் நீரே­ரியை நம்பி குமு­ழ­முனை, அளம்­பில், ஆறு­மு­கத்­தான்­கு­ளம், தங்­க­பு­ரம், செம்­மலை ஆகிய கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் தொழில் செய்து வரு­கின்­ற­னர். இங்கு தூண்­டில் தொழில் பிர­தா­ன­மா­கும். நந்­திக் கடல் சில­வே­ளை­க­ளில் வற்­றி­னா­லும் நாயாற்­றுக் கடல் ஒரு­போ­தும் வற்­றி­ய­தில்லை.

நன்­னீர் மீன்­பி­டி­யின் மூலா­தா­ர­மாக விளங்­கும் நந்­திக்­க­டல் மற்­றும் நாயாறு என்­பன வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தின் கீழ் செல்­வ­த­னால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் பொரு­ளா­தா­ரம் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

Leave a comment