ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைகழக மாணவர் குழு ஒன்று நேற்று (21) மாலை நிர்வாக கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு தங்கி இருக்க முற்பட்டதன் காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைகழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் இன்று (22) முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் விடுதியில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சிலருடைய வகுப்புத்தடை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மாணவர் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உபவேந்தரிற்கு பதிலாக பதில் உபவேந்தர் வந்ததை அடுத்து மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

