ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு

208 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று  (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம மேல்நீதிமன்றத்தில் கடந்த 15 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது  சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் வருகைதராதன் காரணமாக குறித்த மனு இன்று 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment