நாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் போதே இதனைக் கூறினார்.
இவை தொடர்பில் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சிகளினாலேயே இவை முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும், இவற்றுக்கு இளைஞர்கள் குழுவொன்று காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

