தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

227 0
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்ல உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment