மஹிந்தவின் கூட்டு எதிரணியில் பிளவை ஏற்படுத்துவதே 16 பேரின் நோக்கம்- பிரசன்ன

429 0

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் கதிரையில் அமர்த்த வேண்டும் என சகல தேர்தல்களிலும் கூட்டு எதிர்க் கட்சி கூறிவந்ததை, கடந்த 3 வருடங்களின் பின்னர் இப்போதுதான் 16 பேருக்கும் விளங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களுக்கு தேவையாக இருப்பது, பொதுஜன பெரமுனவை இரண்டாக உடைத்து அவர்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதாகும் எனவும் மஹிந்த சார்பு கூட்டு எதிரணி பிரச்சாரச் செயலாளர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment