மலசல கூடத்திற்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

383 0

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் வீடு ஒன்றின் மலசலகூடத்திற்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு ஜோர்ஜ் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீடு ஒன்றின் மலசல கூடத்திற்குள் இருந்தே இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த 48 வயதுடைய சுரேந்திரன் என இனங்காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment