நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிரதேச மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு

221 0

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர்.

இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் விலையைக் குறைப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடுமுழுவதுமுள்ள அனைத்து மீனவர்களையும் இணைத்துக்கொண்டு பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

Leave a comment