யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்கள் கண்டனப் போராட்டத்தில் …………….(காணொளி)

437 0

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டமையை கண்டித்து, ஆசிரியார்கள் கண்டன போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொக்குவில் இந்து கல்லூரி ஒழுக்க குழு ஆசிரியர் எஸ்.பிரதீபன், ஆறு பேர் கொண்ட குழுவினால் வீதியில் வைத்து தாக்கப்பட்டு கை முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை கண்டித்து, யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரியின் நுழைவாயிலில் கண்டன போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டும்  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை கல்லூரியின் ஒழுக்க விதிகளை மீறியமைக்காக, குறித்த ஓழுக்கக்குழு ஆசிரியரினால் கல்லூரியில் இருந்து 3 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment