வழமைக்கு திரும்பிய தபால் சேவை

246 0

அஞ்சல் மற்றும் தொலைத்­தொ­டர்பு உத்­தி­யோ­கத்­தர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 2 நாட்­க­ளாக முன்­னெ­டுத்த அடை­யாள வேலை நிறுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் நேற்று புதன்­கி­ழமை வழமைக்கு திரும்பியுள்ளது.

தபால் உத்தியோத்தர்கள் பல கோரிக்­கை­களை முன்­வைத்து நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிமுதல் செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிவரை அடையாள வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இவ் அடை­யாள வேலை நிறுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளிலும் தபால் சேவைகள் ஸ்தம்­பிதம் அடைந்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment