வடக்கு முத­ல­மைச்­சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

248 0

போருக்கு பின்­ன­ரான காலத்­தில் இளை­ஞர், இளம் பெண்கள் எதிர் நோக்­கும் பிரச்­சி­னை­கள் மற்­றும் தேவை­களை அறிந்து கொள்­ளும் நோக்­கில் தமிழ் மக்­கள் பேர­வை­யின் இளை­ஞர் மாநாடு விரை­வில் நடை­பெ­றும் என்று மாகாண முத­லைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

இளை­ஞர் யுவ­தி­களை ஒன்­றி­ணைத்த இளை­ஞர் மாநாட்­டுக்­கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது நூலக கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றி­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் பேரவை அர­சி­யல் கட்­சி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ஒரு மக்­கள் இயக்­கம். தமிழ் மக்­கள் பேரவை, கட்சி அர­சி­ய­லில் ஈடு­ப­டாது தமிழ் மக்­க­ளின் விடிவு ஒன்­றையே குறிக்­கோ­ளா­கக் கொண்டு இயங்­கு­கின்­றது.

தமிழ்ச் சமு­தா­யம் அறிவு பெற வேண்­டும், ஆற்­றல் பெற வேண்­டும், ஆத­ரவு பெற வேண்­டும், தமிழ்ச் சமு­தா­யத்­துக்கு அதன் சகல மட்­டங்­க­ளி­லும் இருந்து அனு­ச­ரணை கிட்ட வேண்­டும் என்ற ரீதி­யில் இளை­யோ­ரைப் பலம் மிக்­க­வர்­க­ளாக ஆக்க இவ்­வா­றான ஒரு இளை­யோர் மாநாட்டை வெகு­வி­ரை­வில் கூட்ட உள்­ளோம்.

இந்த மாநாட்­டில் எமது இளைய சமு­தா­யத்­து­டன் சேர்ந்து சில முக்­கி­ய­மான விட­யங்­க­ளைக் கலந்­தா­லோ­சிக்க உள்­ளோம். அர­சி­யல் ரீதி­யாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யில் எமது உரி­மை­க­ளைப் பெற நாம் என்ன செய்ய வேண்­டும் என்­பதை ஆராய இருக்­கின்­றோம்.

 இளை­ஞர் யுவ­தி­களை எல்­லாத் துறை­க­ளி­லும் வலுப்­ப­டுத்­தல் எவ்­வாறு என்று ஆராய இருக்­கின்­றோம். அர­சி­யல் ஞானம் பெற்று தற்­போ­தைய அர­சி­யல் கலாச்­சா­ரத்தை மாற்றி அமைத்து எவ்­வாறு எமது இனம் முன்­னேற்­றங்­காண வேண்­டும் என்று கலந்­து­ரை­யாட இருக்­கின்­றோம்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் மாவட்­டங்­கள், பிர­தே­சங்­கள் தோறும் இளை­ஞர் அணி­களை உரு­வாக்­கு­வது பற்றி ஆராய இருக்­கின்­றோம். -என்­றார்.

நிகழ்­வில் இளை­ஞர்­கள், ஊட­க­வி­யா­லா­ளர்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­கள் எனப்­ப­லர் கலந்து கொண்­ட­னர். மாநாடு ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யில் யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a comment