வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்!

216 0

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அலத்தோட்டம் பகுதியில் வைத்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

சல்லி முத்துமாரி அம்மன் கோயில் உற்சவத்தின் போது நடைபவணியாக சென்றவர்கள் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவையிடம் கூறினார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 18, 19, 23, 25, 26, 27 மற்றும் 28 வயதுடையவர்களே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

தேவநகர் மற்றும் திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பிரதேச காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment