பு​கையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

207 0

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் சம்பந்தமாக கடந்த திங்கட்கிழமைக்குள் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எதுவித தீர்வும் வழங்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment