கட்டாக்காலி மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

322 0

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று (05.06) காலை 8.30மணியளவில் சூடுவெந்தபுலவு பகுதியில் சபாரி மோட்டார் சைக்கிலில் தொழிலுக்குச் சென்ற தச்சுத் தொழிலாளியளான துரைச்சாமி திருநாவுக்கரசு (53) வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் 48 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கில் வீதியில் நின்றிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Leave a comment