இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி !

695 0

மாற்றிக்களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைகளை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் பிளாஸ்ரினால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிப்போம், பொலித்தீன் பாவனையை தடுப்போம்.

காடழிப்பை தடுத்து சுத்தமான காற்றை சுவாசிப்போம், போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன.

Leave a comment