கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

361 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி அந்தப்பகுதி மக்கள் 15 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தின் விளைவாக ஒரு தொகுதி காணிகள் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கபபட்டுள்ள போதும், ஏனைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், மக்களின் போராட்டம் தொடர்கின்றது.

இந்த நிலையில் விடுவிக்கப்பட வேண்டிய 59 காணி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

Leave a comment