இலங்கையர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது

514 0

arrestஇலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின்கீழ், இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 21ஆம் திகதியில் இருந்து  23ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அமரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், இலங்கையில் பல மோசடிகளில் ஈடுபட்டவர்.
இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இன்டர்போல் அறிவித்தலின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம், அமெரிக்க குடிவரவுத்துறையினரால் குற்றங்களுடன் தொடர்புடைய 235ஆயிரத்து 413 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment