சீனாவை புரட்டியெடுத்த பெருமழை

623 0

Tamil_News_large_155043420160625023858_318_219சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில், பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, 18ம் தேதி முதல், பலத்த மழை பெய்து வருகிறது. ஜியாங்சூ மாகாணத்தில், நேற்று முன்தினம், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சில இடங்களில், மணிக்கு, 125 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. மழை, வெள்ளத்தில் சிக்கி, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யான்ஷெங் நகரில், சூறாவளி காற்று மற்றும் மழைக்கு, பல வீடுகள் சேதம் அடைந்தன. பல இடங்களில், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப்பணிகளும், நிவாரணப்பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.பல கிராமங்களில், வீடுகள் மீது மரங்கள் விழுந்து கிடப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சீனாவில், பல பகுதிகளில், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவை முற்றிலும்,துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave a comment