கடலட்டை தொழிலை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

302 0

யாழ் வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் வடமராட்சிக்குட்பட்ட மருதங்கேணி பகுதிகளில் தெடர்ச்சியாக வெளி மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுவரும் கடலட்டை தொழிலால் உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று; பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கடலட்டை தொழிலை மேற்கொள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வேண்டும் என்றும் கடலட்டை தொழிலை இப்பகுதியில் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றம் இப்பகுதி மீனவர்களினால் இங்கு தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக இத்தீரமானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நீரியல் வழத்திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன் இந்நடவடிக்கை தொடர்ந்தால் எதிர்வரும் நாட்களில் பாரிய போராட்டங்களை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் இப்பகுதி மீனவர்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தனர்

வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இச்சந்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a comment