ஆலய தேர்திருவிழாவின் போது 12 பவுண் தங்க நகைகள் திருட்டு!

213 0

வவுனியா குருமன்காடு சந்தியிலுள்ள ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று (28.05) காலை இடம்பெற்றுள்ளது இதன்போது பலரின் தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள காளி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது.

இதே நேரத்தில் அங்கு வந்த திருடர்கள் தமது கைவரிசையைக்காட்டி தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்தவர்கள் அணிந்திருந்த தங்க நகைளை திருடிச் சென்றுள்ளனர்.

தங்க நகைகளைப்பறிகொடுத்தவர்கள் ஆலய பரிபாலனசபையினரிடமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் நான்கு பவுண் தங்க நகையை பறிகொடுத்த பெண்மணி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

5 பேரின் தங்க நகைகளின் பெறுமதி 12பவுண் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திருட்டுத் தொடர்பான மேலதிக விசாரணகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave a comment