மட்டக்களப்பில் மாடுகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் கைது!

10281 0

மட்டக்களப்பு,சந்தனமடுஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மூன்று மாடுகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவரை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து மாடுகளையும் அதனை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்திய சிறிய ரக கெப் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாடுகள் இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்டமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment