காடுவெட்டி குரு மறைவு – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்

273 0

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வன்னியர் சங்கத் தலைவராகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தளகர்த்தராகவும திகழ்ந்த காடுவெட்டி குரு, சமூகநீதி காக்கும் போராளியாக வாழ்ந்தவர்; அரசியல் எல்லைகளைக் கடந்து என்னிடம் நட்பு பாராட்டிப் பழகியவர். அவர் உடல் நலம் இன்றி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உடனேயே, அங்கே சென்று சந்தித்தேன். அவருக்குச் சிகிச்சை தந்த மருத்துவர்களையும் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லி வந்தேன்.

இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டிய சகோதரர் காடுவெட்டி குரு மறைவினால், துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு, பா.ம.க. தோழர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a comment