கட்டுநாயக்காவில் இரு பெண்கள் கைது

201 0

சட்ட விரோதமாக தங்க பாளங்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்கள் இருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

51 மற்றும் 21 வயதுடைய பொரள்ளை மற்றும் வெள்ளம்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களே இன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தங்கப்பாளங்கள் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்தனர்.

Leave a comment