கஹட்டோவிட்டாவில் வெள்ளம், 50 குடும்பங்கள் இடம்பெயர்வு

966 0

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததில் கஹட்டோவிட்டாவின் பிரதான வீதி இன்று (25) மீண்டும் நீரில் மூழ்கியுள்ளது.

கஹட்டோவிட்ட ஊடாக செல்லும் நிட்டம்புவ – கிரிந்திவெல பாதை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதனால், அப்பாதையின் சகல போக்குவரத்துக்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வெள்ளத்தினால் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளன. கஹட்டோவிட்டாவிலிருந்து இன்று(25) காலை வெளிப் பிரதேசங்களுக்கு தொழிலுக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அத்தனகல்லை ஓயா ஊடறுத்துச் செல்லும்  உடுகொட, திஹாரிய ஆகிய கிராமங்களிலும் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இன்று காலை 10.00 மணியளவில் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்.

கஹட்டோவிட்டாவில் கடந்த ஞாயிறு (20) இரவு  வெள்ளம் ஏற்பட்டு இரண்டு நாள் இப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment