புதையல் தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது !

258 0

புதையல் தோன்றுவதற்கு முயற்சித்த ஏழுபேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

குறித்த நபர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூசை  ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்களில்  மூவர்   கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தை சேர்ந்த  கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் எனவும் ஒருவர் தமிழர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்  ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான்  நிதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment