யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

347 0

1473668487_aவடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று  யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும், போதிய பராமரிப்பு இல்லாமலும் யாழ் குடாநாட்டில் உள்ள ஏராளமான விவசாயக் கிணறுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இதனால் மழைநீருடன் இரசாயனங்கள் விவசாயக் கிணறுகளினுள் சென்று நிலத்தடிநீரை மாசடையச் செய்து வருகின்றன.

இதனைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு விவசாய அமைச்சு விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணியைக் கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளது.