தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லக்கட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி

203 0

தமிழகம் – தூத்துக்குடியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 தமிழர்களுக்கும் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பல தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது உயிரிழந்த தமிழக உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மக்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவினையும் தெரிவித்த ஈழத் தமிழ் உறவுகள், மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமையையும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.

Leave a comment