பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு – ஜனாதிபதி கவலை

308 0

my3-new2_ciநாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் பாவனை குறைவடைந்துள்ளதாகவும், எனினும் போதைப் பொருள் கொண்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.