முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!! அகழ்வு ஆரம்பித்துள்ளது இராணுவம்!!

221 0

அண்மைக்காலமாக பல இடங்களில் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே படையினர் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இலங்கை விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி நீதிவான் மன்றில் அனுமதி பெற்று இந்தத் தேடுதல் நடத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

Leave a comment