வவுனியா சிதம்பரபுரத்தில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி!

215 0

வவுனியா சிதம்பரபுரம் கற்குலம்-2ஐ சேர்ந்த 64 வயதுடைய நாகன் கோணாமலை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இவர் நேற்றைய தினம்(20.05.2018) மாலை 4.30 மணியளவில் கற்குலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மாடு மேய்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பாததையடுத்து வீட்டார் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தேடி சென்றுள்ளனர்.
இதன் போது இரவு 8.மணியளவில் குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திடீர் மாரடைப்பே மரணத்திற்கு காரணமாக இருக்கும் என சந்தேகப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment