எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

248 0

மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வேன் ஒன்றில் வருகை தந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளயடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது..

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment