ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

252 0

ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியின் சார்ப்ரூச்கென்(Saarbruecken ) நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தஎன தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment