புதன்கிழமை வரை பஸ் கட்டண அதிகரிப்புக்கு அவகாசம்- தனியார் பஸ் சங்கம்

273 0

அரசாங்கம் வழங்க இணக்கம் தெரிவித்த 12.5 வீத கட்டண அதிகரிப்பை பெற்றுக் கொடுக்காவிடின் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அச்சங்கத்தின் தலைவர் சரத் விஜிர குமார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்காதிருந்தால், இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment