வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி (காணொளி)

30025 0

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி பிரபாகர குருக்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

நிகழ்வில் சுட்டிகளில் நெய்விளக்கேற்றி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், மாணிக்கம் ஜெகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment