அமெரிக்க கோல்ப் வீரர் லூகாஸ் க்ளோவர், தாய் தாக்கப்பட்ட விவகாரம் – மனைவி கைது

231 0

நன்றாக விளையாடாத கணவரை தாக்கியதாக பிரபல அமெரிக்க கோல்ப் வீரர் லூகாஸ் க்ளோவரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் கோல்ப் சாம்பியனான லூகாஸ் க்ளோவர் தற்போது பிஜிஏ தொடரில் விளையாடி வருகிறார். அமெரிக்காவில் நடந்து வரும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடததால் லூகாசிற்கும், அவர் மனைவி கிரிஸ்டா க்ளோவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த கிரிஸ்டா அவர் கணவரை கடுமையாக தாக்கினார். அதனை தடுக்க வந்த லூகாசின் தாய்க்கும் அடி விழுந்தது. இதையடுத்து கிரிஸ்டா க்ளோவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கிரிஸ்டாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதுகுறித்த செய்தி ஊடகங்களில் பரவ தொடங்கியது. இச்சம்பவம் குறித்து பேசிய லூகாஸ் க்ளோவர், சரியாக விளையாடததால் கோபமடைந்த மனைவி என்னை அடித்தார். இது எங்கள் குடும்ப பிரச்சனை என தெரிவித்தார். பிரபல கோல்ப் வீரரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment