முள்ளிவாய்க்கால்!

211 0

புனித ஆன்மாக்களின் புகழுடல்கள்
புதைந்த மண்ணில்
யார் யாரோ வந்து 
மலம் கழிக்க துடிக்கிறனர்

அரசியல் பொறுக்கிகளே இது ஒன்றும்
வாக்குப் பொறுக்கும் இடமல்ல
நீங்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு

அவர்கள் செய்தால் நாம் வரமாட்டேனென்று
ஒரு கூட்டம்
இது எங்களின் நிலம் என்று இன்னொரு கூட்டம்
இறுதிவரை நின்றேன் என்று வாக்குப் பொறுக்க
இன்னொரு கூட்டம்
எல்லோருக்கும் துரோகிகள் பட்டம் கொடுக்க
இன்னொரு கூட்டம்

ஓ வாக்குப் பொறுக்கிகளே
உங்கள் அரசியல் விபச்சாரங்களை
முள்ளிவாய்க்காலுக்கு வெளியே
வைத்துக்கொள்ளுங்கள்

இது இலட்சியக் கனவுகளை
இறுதிவரை சுமந்து சென்ற
புனித ஆன்மாக்கள்
துயில்கொள்ளும் தேசம்

அவர்களை அமைதியாய் உறங்கவிடுங்கள்
இனியாவது ஒருமுறை ஏனும்

அ.யசீகரன்
13.05.2018

Leave a comment