வடக்கு முதல்வர் கலந்து கொண்டுள்ள விஷேட கருத்தமர்வு

232 0

வட மாகாணத்தில் உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.

இந்த கருத்தமர்வு இன்று வட மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமான இந்த கருத்தமர்வில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சட்டவாக்கம் மற்றும் அதிகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a comment