உயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பில் நினைவுத்தூபி

284 0

உயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கு இடத்தினை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாநகரசபை அனுமதி வழங்கியுள்ளது. உயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான இடத்தினை ஒதுக்கித் தருமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் மாநகர மேயர் தி.சரவணபவனிடம் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வின்போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் மூன்றாவது அமர்வின் போது, மாநகர மேயரால் இந்தக் கோரிக்கை தொடர்பில் அறிவிக்கப்பட்டு சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான இடத்தை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment